Sunday, June 7, 2009

சமயமே நீ நின்று போ




சமயமே நீ நின்று போ
நாணமே விடை வாங்கி போ

(சமயமே)

இரவே ஒரு நிலவை அழைத்து
இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கொடுத்து
அருகில் நெருங்கி வந்தாலே வா இன்பம்

(சமயமே)

கோடி வார்த்தைகள் உனைப் பார்த்தால் பேசத் தோன்றும்
தேடி வந்தப் பின் எதனாலோ மௌனம் தோன்றும்
மலை மேல் பூ பூத்தால் மலை முழுதும் வாசம் தோன்றும்
மனதில் காதல் வந்தால் மறைத்தாலும் வெளியில் தோன்றும்

(சமயமே)

உன்னை மாற்றவே நான் நினைத்து வந்த போது
என்ன மாயமோ எனக்குள்ளே மாற்றம் வருமோ
பார்வை உன் பார்வை போர் மூட்டிப் போகும்போது
புதிதாய் நான் பிறந்தேன் பெண்ணான ஜென்மம் காண்கிறேன்

(சமயமே)

படம்: காதல்னா சும்மா இல்ல
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர், மணி ஷர்மா, E.S.மூர்த்தி

கேக்கறதுக்கும் பாக்கறதுக்கும் such a lovely song :)

Dedicated to Anu & Vijayakumar

2 Comments:

MyFriend said...

நன்றி ஜெயந்தி அக்கா. :-)

Unknown said...

எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

Last 25 songs posted in Thenkinnam