Saturday, February 2, 2008

230. சந்திரரே சூரியரே

கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது:




சந்திரரே சூரியரே
நட்சத்திர நாயகரே
அமரன் கதையைக் கொஞ்சம்
அறிந்து வந்து சொல்லுங்களேன்
வீரர் குல ஆம்பிளை - அவன்
மறவர் குல மணிப்புள்ள

தைரியம் இருந்துச்சுன்னா
சமுத்திரமும் காலளவு
துணிச்சல் வளர்ந்திருந்தா
தூண்களெல்லாம் நூலளவு
எதிரி இல்லையின்னு
எழுதி வச்சான் ஏட்டிலே

கீதையைப் படிக்கவில்ல
அவனும் ஒரு கண்ணனே
அவன் கடலைப்போல
காத்தைப் போல
காக்க வந்த சாமிங்க

(சந்திரரே சூரியரே)

தங்கம் போல மனசிருக்கு
தருமனாக மாறுவான்
சிங்கத்தை வேட்டையாடி
சேரிக்கெல்லாம் போடுவான்
அமரன் சீறி வந்தா
அலையும்கூட அடங்குமே

குத்தமுல்ல ஊருல
அவன் சுத்தமுல்ல ஆளுங்க
அவன் முகத்தைப் பார்த்து
மனசு பூத்து
கோடி சனம் வாழ்த்துங்க

(சந்திரரே சூரியரே)


***********

'பாடும் நிலா' பாலு பாடியது:




சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்ததடா
மனசும் அங்கே சிவந்ததடா
சுட்ட வடு ஆறல
நெஞ்சில் பட்ட பின்பும் மாறல

(சந்திரனே சூரியனே)

நெஞ்சிலே நெருப்பை வைச்சா
நீரும் அணைக்க முடியுமா?
கண்ணிலே முள்ளு தைச்சா
இமையை மூட முடியுமா?
பாரதக் கதையும் கூட
பழியில் முடிஞ்ச காவியம் தான்

இருப்பதும் இறப்பதும்
அந்த இயற்கையோட கையிலே
நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது
என் உயிரெழுதும் கதையிலே

(சந்திரனே..)

நீயும் நானும் வாழனும்ன்னா
தீமை எல்லாம் தீயிடு
கெட்டதிங்கு அழியனும்ன்னா
கொடுமை எல்லாம் பலிகொடு
கண்ணன் கீதையிலே
சொன்னதைப்போல் நடந்திடு

பச்சைப் பயிர் வாழ
மண்ணில் களையெடுத்தா தவறில்ல
அந்த முடிவில் தானே தொடக்கம் தேடி
புதுக்கதை நான் எழுதறேன்

(சந்திரனே சூரியனே)


படம்: அமரன்
இசை: ஆதித்யன்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்/எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam