Monday, February 11, 2008

256. ஏதேதோ எண்ணங்கள் வந்து


Pattiyal - Yedhedh...

ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போனதே
வழிதேடி மனசுக்குள் வந்து வருகை பதிவு செய்யுதே
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது அடி மனம் அசைந்தது பார்
மிதந்தது மிதந்தது இரவென மிதந்தது
வளர்ந்தது இரு இமை வளர்ந்தது பார்
புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர் வரை தெளிந்தது பார்
(ஏதேதோ..)

பழகிய ருசியே பழகிய ருசியே உயிரில் உன் வாசம்
நெருங்கிய கனவே நொருங்கிய கணமே உதட்டில் உன் சுவாசம்
வேரில்லா மலர்கள் என்னை வந்து வருடியதே
காலில்லா காற்றுதான் என்னை தேடி தடவியதே
சிறகில்லா மேகமும் என்னை என்னை மோதுதே
நகமில்லா இரவுகள் என்னை மட்டும் கீரியதே
முதல் முறை தெரிந்தது முதல் முறை புரிந்தது
முதல் முறை பிறந்தது தனி உணர்வு
இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்
இது ஒரு அவசியம் புது உறவு
(ஏதேதோ..)

கவனித்து நடந்தேன் கவனித்து நடந்தேன் உனக்குள் விழுந்திடவே
இமைகளை திறந்தேன் இமைகளை திறந்தேன் உடனே பறந்திடவே
யார் யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே
நீ வந்து போகையில் கண்கள் அகலம் ஆகிடுமே
திரும்பாமல் போனால் பாதி ஜீவன் தேய்விடுமே
விரும்பாமல் போனால் மொத்த ஜீவனும் சாய்ந்திடுமே
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அழைந்தது அடி மனம் அசைந்தது பார்
மிதந்தது மிதந்தது இரவென மிதந்தது
வளர்ந்தது இரு இமை வளர்ந்தது பார்
(ஏதேதோ..)

படம்: பட்டியல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ஷ்வேதா

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam