Monday, February 4, 2008

238. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே



அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
(அம்மாவும்..)
அம்மாவும் நீயே..

தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனம் தாழ்த்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
(தந்தை..)
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே
இதை அறியாயோ முருகா உன் கருணையில்லையோ
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா
(அம்மாவும்..)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே
(பூனை..)
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா உன் கருணையில்லையோ
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா
(அம்மாவும்..)

படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: R சுதர்சனம்
பாடியவர்: MS ராஜேஸ்வரி
வரிகள்: வாலி

விரும்பி கேட்டவர்: அர்சாத்

1 Comment:

இம்சை அரசி said...

எனக்கு ரொம்ப பிடிச்சப் பாட்டு... தலைவர் செம க்யூட்டா இருப்பார் :)))

Last 25 songs posted in Thenkinnam