Thursday, February 28, 2008

293. நினைவோ ஒரு பறவை




நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

(நினைவோ ஒரு பறவை)

ரோஜாக்களில் பன்னீர்த்துளி
வழிகின்றதேன் அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
தந்தேன் தர வந்தேன்

(நினைவோ ஒரு பறவை)

பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்

(நினைவோ ஒரு பறவை)


படம்: சிகப்பு ரோஜாக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: கமல்ஹாசன், எஸ்.ஜானகி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam