Wednesday, February 27, 2008

291. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சக் கிளி








உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா.

- (உச்சி வகுந்தெடுத்து)

( பெண் குரல் - ஏ ஆரிராரோ.. ஆரிராரோ...

ஆரிராரிராரோ ஆரிராரோ... ஆரிராரோ..

ஆரிராரோ... ஆரிராரோ.. ஆரிராரோ... )

பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா,
பால் திரிஞ்சி போனதுனு சொன்னாங்க.
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல.
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துக்கல.

- (உச்சி வகுந்தெடுத்து)


வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல.

- (உச்சி வகுந்தெடுத்து)

( ஆண் குரல் - நானனனா நானனனாநனனா ஹேய்ய்.
நான ஹேய்ய்ய்
நானனனா நானனனானா ஹேய்ய். )


பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க.
செங்கரையான் தின்னிருக்க ஞியாயமில்ல.
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல.

-(உச்சி வகுந்தெடுத்து)

படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடியவர்: SPB
இசை : இளையராஜா
விரும்பிக் கேட்டவர் - ஐயப்பன்

2 Comments:

TBCD said...

நல்ல பாடல்..

ஒலிஒளியுடன் இருந்திருந்தால் இன்னமும் அமர்க்களம்...

TBCD said...

ஆக்கா ஆக்கா.

நேயர் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றிய சீவ்வ்சுக்கு என் நன்றிகள்..

Last 25 songs posted in Thenkinnam