Tuesday, February 12, 2008

259. காதல் கவிதைகள் படித்திடும் நேரம்


Kadhal Kavithaigal...

Yes.. I Love This Idiot!
I Love this Lovable Idiot!

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இதம் மாறும் இளமை பரிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இடம் தரும்
(காதல்..)

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்
(காதல்..)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய் தினம் தினம்
(காதல்..)

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

3 Comments:

pudugaithendral said...

என்ன ஒரு இனிமையானப் பாடல்.

பாலுவின் குரலில் தேனாய் இனிக்கும்.

நம்ம மும்பையைக் கூட காட்டிருபாங்க.

பாடல் அமைப்பும், பாடலும் அருமையா இருக்கற சில பாடல்களில் இதுவும் ஒன்று.

நன்றி.. மை ஃபிரண்ட்

Anonymous said...

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும்

காதல் பயணங்கள் said...

அருமையான வரிகள்

Last 25 songs posted in Thenkinnam