Thursday, February 14, 2008

265. பூவே வாய் பேசும் போது



பெண்: பூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழிக் கேட்டுக் கொண்டு காற்றே நல்வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்
என்னைத் தாண்டிப் போனால் நான் வீழுவேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்

(பூவே வாய் பேசும் போது)

பெண்: பூக்களைத் தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே
புன்னகைப் புரிந்தால் களைந்திருப்பேன் அன்பே
(பூக்களைத் தொடுத்து)
காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்
உன் சுவாசப் பாதையில் நான் சுற்றித் தெரிதுவேன்
உன் சுவாசப் பாதையில் நான் சுற்றித் தெரிதுவேன்

ஆண்: என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய்
என்ன நான் செய்வேன்

(பூவே வாய் பேசும்போது)

பெண்: நீயொரு பார்வையால் நெருங்கி விடு என்னை
நீயொரு வார்த்தையால் நிரப்பி விடு என்னை
(நீயொரு பார்வையால்)
நேசத்தினால் என்னை கொன்று விடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்து விடு
என் நினைவு தோன்றினால் துளி நீரைச் சிந்திடு
என் நினைவு தோன்றினால் துளி நீரைச் சிந்திடு

ஆண்: அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது
இன்று நீ சொல்வது

(பூவே வாய் பேசும்போது)

படம் : 12B
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா, மஹாலஷ்மி ஐயர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam