Wednesday, February 13, 2008

261. ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து


Saththam Podathey ...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து
ஏன் என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே
என் நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றது....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...
(உணவுகள்..)
(ஓ இந்த காதல்..)

காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டா..
காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...
எட்டி உதைக்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...
கண்ணாடி என் நெஞ்சம்தானடி தானடி.....
உன் கையில் கல் இன்று ஏனடி ஏனடி
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடி
உனைக்கண்டு தேயுது தொண்டை திணருதடி
(உணவுகள்..)

பிரம்மா என் காதல் என்ன ஆகும்மென்றேனே...
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னானே...
காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே..
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..
சொல்லாத ஆசைகள் ஏதுடி ஏதுடி .....
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதுடி ஏதுடி .....
நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி..
ஓஹோ உன் நினைவுகளோ பல முறை கொல்லுதடி.....
(உணவுகள்..)
(ஓ இந்த காதல்..)

படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, அட்னான் சாமி

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam