Friday, December 5, 2008

818. உனக்காகத்தானே இந்த உயிருள்ளது




உனக்காகத்தானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோளுள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யாரென்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒருமுறை ஒருமுறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறுமுறை மறுமுறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

(உனக்காகத்தானே இந்த உயிருள்ளது)

வான் பார்த்த பூமி காய்ந்தாலுமே
வரப்பென்றும் அழியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி

மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம்
உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா

ஒருமுறை ஒருமுறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறுமுறை மறுமுறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

(உனக்காகத்தானே இந்த உயிருள்ளது)

நாமிருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நாமெடுத்த நிழற்படம் அழிந்தாலுமே
நிஜமென்றும் அழியாதடி

நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா
நீயின்றி என் வாழ்க்கை பழுதல்லவா

ஒருமுறை ஒருமுறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறுமுறை மறுமுறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

(உனக்காகத்தானே இந்த உயிருள்ளது)


படம்: கற்றது தமிழ்
பாடல்: நா.முத்துக்குமார்
இசையமைத்துப் பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

1 Comment:

நாகை சிவா said...

கப்பி! அன்னிக்கு சொன்னியே அதே பொண்ணு தான்.... ரைட் ரைட் அனுபவி ராஜா அனுபவி..

பாடல் மிக அருமையான பாடல் :)

Last 25 songs posted in Thenkinnam