Tuesday, December 23, 2008

853. எம்.ஜி.ஆர் - பூ மழைத் தூவி




பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின்
நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கள குங்குமம் சிரிக்கின்றது

(பூ மழைத் தூவி)

கச்சேரி மேளங்கள் வேடிக்கை வானங்கள்
ஊர் எங்கும் கொண்டாட்டமாம்
உனை கண்றோர்கள் கண்பட்டு
போகின்ற எழிலோடு சிங்கார தேரோட்டமாம்
தோழி அத்தானை பார் என்று உனை கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள

(பூ மழைத் தூவி)

வெண்சங்கு கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா
என் அண்ணாவை ஒரு நாளும்
என் உள்ளம் மறவாது
என்றாடும் இதம் அல்லவா
நீ வாழ்கின்ற நாடு எல்லாம் திருநாடே
என உனை கொஞ்ச மணவாளன் தினம் பாட

(பூ மழைத் தூவி)

கால் பட்ட இடம் எல்லாம் மலர் ஆக
கைப்பட்ட பொருள் எல்லாம் பொன் ஆகனும்
உன் கண்பட்டு வழிகின்ற நீர் எல்லாம்
ஆனந்த கண்ணீரே என்று ஆகனும்
ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ
அதை பார்கின்ற என் உள்ளம் தாய் ஆக

(பூ மழைத் தூவி)

படம் : நினைத்ததை முடிப்பவன் (1975)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள் :
பாடியவர் :

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam