Wednesday, December 10, 2008

826. ஆடாத மனமும் ஆடுதே



ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்

(ஆடாத மனமும் ஆடுதே)


கோவைக் கனி போலே
இதழ் கொஞ்சும் என் வானமுதே

பாவை என் நெஞ்சில்
புதுப் பண் பாடும் ஆனழகே

இது வானோரும் காணாத ஆனந்தமே
இது வானோரும் காணாத ஆனந்தமே

ஆடாத மனமும் ஆடுதே

ரோஜா புது ரோஜா
அழகு ரோஜா மலர் தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ
பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே


(ஆடாத மனமும் ஆடுதே)

திரைப்படம்: களத்தூர் கண்ணம்மா
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா - பீ.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
வரிகள்: கு.ம.பாலசுப்ரமணியம்


****

பாடல் வரிகள் அனுப்பிய அன்பருக்கு நன்றி. பெயர் பின்னூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam