Friday, December 19, 2008

847. ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சல் ஆடும்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
உந்தன் ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட வேண்டும்

ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

இன்னும் நூறு ஜென்மங்கள்
சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்

தென் பொதிகை சந்தனக் காற்று
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே!
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே!

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
விரும்பிக்கேட்டவர் : சிபி
இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்
பாடியவர்: உன்னிக்கிருஷ்ணன்
திரைப்படம்: பூவே உனக்காக




5 Comments:

நாமக்கல் சிபி said...

பாடலைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி!

நாமக்கல் சிபி said...

//இன்னும் நூறு ஜென்மங்கள்
சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்
//

அருமையான வரிகள்! இந்தப் பாட்டுலே!

எப்பவும் கேட்டுகிட்டே இருக்கலாம்!

சென்ஷி said...

மிக அருமையான பாடல்.. பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா..!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விரும்பிக்கேட்டவரே நீங்கதானே சிபி அதையும் இப்ப சேர்த்துட்டேன்.. :)

-------------
நன்றி சென்ஷி..

Anonymous said...

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!

Last 25 songs posted in Thenkinnam