Sunday, December 21, 2008

849. எம்.ஜி.ஆர் - கொடுத்தது எல்லாம் கொடுத்தான்




கொடுத்தது எல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்

மண் குடிசை வாசல் என்றால்
தென்றல் வர வெறுத்திடுமா

மாலை நிலா ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்தது இல்லை

படைத்தவன் மேல் பழியும் இல்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாழ வாட சிலர் வாட வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்தது இல்லை

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
ஏதுவந்த போதும் பொதுவேன்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

படம் : படக்கோட்டி (1964)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள் : வாலி
பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam