Wednesday, December 10, 2008

827. தனிமையிலே இனிமை காண முடியுமா





தனிமையிலே..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா

நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா

தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்

தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா


திரைப்படம்: ஆடிப் பெருக்கு
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா - பீ.சுசீலா
இசை: ஏ.எம்.ராஜா
வரிகள்: கே.டீ.சந்தானம்


***

பாடல் வரிகள் அனுப்பிய அன்பருக்கு நன்றி. பெயர் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறோம்.

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam