Wednesday, December 24, 2008

857 : இது சங்கீதாத் திருநாளோ...!

இது சங்கீதத் திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்..
முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே..
கொஞ்;சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீதத் திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ (இசை)

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..
செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..
உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..
அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவள் போல அழகில்லை..
பூங்காற்றில் இவள் போல சுகமில்லை..
இதுபோல சொந்தங்கள் இனியில்லை..
எப்போதும் அன்புக்கு அழிவில்லை..
இவள்தானே நம் தேவதை..

இது சங்கீதத் திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ

லல லாலால்ல லலலால...(இசை)

நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்..
சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்..
கண்ணில் மின்னும் ஒரு காவியம்;..
மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;..
நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..
என்றும் என்றும் இவள் ஞாபகம்..
இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..
இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..
இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..
எப்போதும் தாலாட்டுவேன்..

இது சங்கீதத் திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ


சின்னச் சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்..
முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே..
கொஞ்;சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..


இது சங்கீதத் திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ

திரைப்படம் : காதலுக்கு மரியாதை
பாடியவர் : பவதாரிணி
இசை : இளையராஜா

கல்லூரித் தோழி சங்கீதா அவர்களின் பிறந்த நாளை(திசம்பர் 25) ஒட்டி
அவருக்கு இந்தப் பாடல் டெடிகேட் செய்யப் படுகிறது!

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam