Wednesday, December 24, 2008

859. எம்.ஜி.ஆர் - காற்று வாங்க போனேன்




காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கி போனாள்
அந்த கன்னி என்ன ஆனாள்

என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஒடை
அவள் கேட்டு வாங்கி போனாள்
அந்த கன்னி என்ன ஆனாள்

நடை பழகும் போது தென்றல்
விடை சொல்லி கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அவள் கேட்டு வாங்கி போனாள்
அந்த கன்னி என்ன ஆனாள்

நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
இந்த இதயம் தாங்கவில்லை

படம் : கலங்கரை விளக்கம் (1965)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்

1 Comment:

Anonymous said...

இந்த படல் கோப்பு அனுப்பியதற்கு. மிக்க நன்றி சிவா.

Last 25 songs posted in Thenkinnam