Monday, December 8, 2008

823. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்..

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

கொஞ்சிக்கொஞ்சி................

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்(நஞ்சை)
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா

பள்ளியில் சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்

சபாஷ்....

(கொஞ்சிக்கொஞ்சி)

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது( அக்கம்)
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்

சபாஷ்..

(கொஞ்சிக்கொஞ்சி)

தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ

புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்

சபாஷ்...

(கொஞ்சிக்கொஞ்சி)
திரைப்படம் : கைதி கண்ணாயிரம்
பாடியவர் : சுசீலா
பாடல் இயற்றியவர் : மருதகாசி
இசையமைத்தவர்: கே.வி மகாதேவன்

10 Comments:

கானா பிரபா said...

இப்ப எதுக்கு உங்க காலத்து ஞாபகம் ;)

கலக்கல் பாட்டு

பழமைபேசி said...

நொம்ப நாளக்கப்புறம் இந்தப் பாட்டு....நன்றிங்கோ!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொஞ்ச நாள்முன்ன கவிதா இந்த பாட்டைப்பாடி போஸ்ட் போட்டிருந்தாங்க எனக்கு பிடித்த பாட்டு.. அந்த பாப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ரொம்ப நாளா தேன்கின்ணத்துல பாட்டு போடலை..அதான் :)

இது என்காலத்துப்பாட்டு இல்ல ப்ரபா.. எங்கம்மா காலத்துப்பாட்டு.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பழயபாட்டுன்னதும் ஓடிவந்த பழமைப்பேசிக்கும் நன்றிங்க.. :)

சகாதேவன் said...

சபாஷ்.
அருமையான பாட்டு. படத்தில் டெய்ஸி இரானி என்ற மும்பை குழந்தைதான் நடிக்கும்.
யார் குழந்தை படத்தில்
அப்பா பெயர் கேட்டதும்
'மாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தரராஜன்' என்று சொல்லுமே.

சகாதேவன்

நசரேயன் said...

தகவலும் பாட்டும் நல்லா இருக்கு

ஆயில்யன் said...

//தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா//


அழகான பாட்டு !

எங்க அம்மாவுக்கு புடிச்ச பாட்டும் கூட டிடியில போட்டா கூடவே பாடுவாங்க :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சகாதேவன் அவ பேரை ஞாபகம் தந்ததுக்கு நன்றி..

உன் பேரென்னடா பூரி ..
அது திங்கற பூரி இல்லை ..
உங்கப்பா பேரு என்னடா
உடம்புல ஒரு விரைப்போட ஸ்ரீமான் சுந்தராஜன் ஹஹ்ஹா.. அட்டகாசமான நடிகை இல்ல.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நசரேயன்..
----------------
ஆயில்யன் உங்கம்மா உங்களுக்குபாடினதா இது... ஓ ... பார்த்து கவனம்.. :)

Anonymous said...

நன்றி

Last 25 songs posted in Thenkinnam