Monday, December 22, 2008

851. எம்.ஜி.ஆர். - தரை மேல் பிறக்க வைத்தான்




உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய்
அலைந்து உயிரை கொடுப்பவர் இங்கே

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் வீடு தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும்
தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்வு
இது தான் எங்கள் வாழ்க்கை

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியா வந்தோர் துணிவை தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
அரை ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்

படம் : படக்கோட்டி (1964)
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள் : வாலி
பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்

2 Comments:

Manki said...

என்னா பாட்டு... பட்டையைக் கிளப்பிருச்சு!

Unknown said...

வாலி ஐயா க்ரேட்

Last 25 songs posted in Thenkinnam