Wednesday, December 19, 2007

125. காதோடுதான் நான் பாடுவேன்


காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடிமீது கண்மூடுவேன்

[காதோடுதான்...]

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான்
நான் அறீந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துனையாக எனை மாற்றவா?
[உனக்கேற்ற...]
குல விளக்காக நான் வாழ வழிகாட்டவா?

[காதோடுதான்...]

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
[பாலூட்ட...]
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
[எனக்காக...]
இதில் யார் கேட்டு என்பாட்டை முடிக்கின்றது

[காதோடுதான்...]


படம் : வெள்ளி விழா
இசை : குமார்.V
பாடல் : வாலி
பாடியவர் : L.R. ஈஸ்வரி

2 Comments:

G3 said...

super paatu :)) one of my favourites :)

வெ. ஜெயகணபதி said...

எனக்கு பிடித்த பாடல்....

Last 25 songs posted in Thenkinnam