Tuesday, July 1, 2008

540. மயக்கமா கலக்கமா

Mayakama Kalakama - PB Srinivas
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?...

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
(மயக்கமா)

3 Comments:

முகவை மைந்தன் said...

//உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு //

ஒவ்வொரு முறை வாழவின விளிம்புக்கு நான் போனப்ப எனக்குத் தெம்பூட்டிய வரிகள், வாலிக்குந்தான்.

கந்தர்மடத்திலிருந்து கவின் said...

நல்ல முயற்சி, தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

LEO PRABHU said...

என் வாழ்வில் நான் தனிமையில் கேட்க விரும்பும் பாடல் .......வரிகள் தந்ததற்கு நன்றி....

Last 25 songs posted in Thenkinnam