Tuesday, July 22, 2008

583. என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா




என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?
(என்னை தாலாட்டும்..)

நதியாகா நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகினேன்
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்
முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்க்கையிலே வானமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்
(என்னை தாலாட்டும்..)

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே
ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் ககியில் விளக்காகுமே
அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன்
தினம் தீயாகிறேன்
(என்னை தாலாட்டும்..)

படம்: உன்னை நினைத்து
இசை: சிற்பி
பாடியவர்: சுஜாதா / உன்னி மேனன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam