Wednesday, July 9, 2008

550.பேசும் யாழே பெண் மானே

பெண்: ஆஆ ஆ
ஆண் : ஆஆஆ
பெண்: ஆஆ
ஆண்: ஆஆ

ஆண் :பேசும் யாழே பெண் மானே(2)
வீசும் தென்றல் நீதானே(2) -
பேசும் யாழே பெண்மானே

பெண்: நீல வானே தன்னைமறந்து
நிலவினை புகழ்ந்திடலாமோ
வானே தன்னை மறந்து
நிலவினை புகழ்ந்திடலாமோ
ஆண்: எழிலே தமிழ்க்காவியமே
எழுதாத ஓவியமா(எழிலே)


பெண்:இன்பமொழி பேசிப்பேசி
அ ன்புப்பார்வை வீசிவீசி (இன்பமொழி)
ஆண் : பேசும் யாழே பெண்மானே
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே

பெண்: யாழே நான் என்றால்-நாதம்
யாழே நான் என்றால்
நாதம் நீர்தானே (யாழே )

ஆண்: நாதத்தில் பேதமுண்டு
நமக்கது வேண்டாமே(நாதத்தில்)
காதல் வாழ்வே கனிரசமே
இருவரும்: காதல் வாழ்வே கனிரசமே
மாதர் மறவர் உல்லாசமே
காதல் வாழ்வே கனிரசமே




இருவரும் : காதல் வாழ்வே கனிரசமே
மாதர் மறவர் உல்லாசமே
காதல் வாழ்வே கனிரசமே
திரைப்படம் : நாம்
பாடியவர்கள் .AM ராஜா, ஜிக்கி
இசையமைத்தவர்: CSஜெயராமன்
பாடலை இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி

1 Comment:

Anonymous said...

எம்ஜிஆர் நடித்த படம்.அப்போது அவர் பெயர் எம்.ஜி.ராம்சந்தர்
என்று போஸ்டர்களில் இருக்கும்.
ஜெயராமனின் தங்கை கலைஞரின்
முதல் மனைவி.

Last 25 songs posted in Thenkinnam